விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த காணை பகுதியில் உள்ள வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.கடந்த 4ம் தேதியில் இருந்து 8 ம் தேதி வரை நடந்த கருத்தரங்கை, கல்லுாரி தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் மும்தாஜ்பேகம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சிகா கல்வியியல் கல்லுாரி, முதல்வர் ஜெயக்குமார், குறிஞ்சிபாடி, திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிங்காரவேல், கேரளா மத்திய பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் அம்ருத்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை, முதல்வர் குமரவேலு, துணை பேராசிரியர் ஜான்பால் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE