விழுப்புரம்; மொபைல் போன் டவரில், காப்பர் கம்பி திருட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, அங்குள்ள தனியார் மொபைல் போன் டவரில் காப்பர் கம்பி திருட முயன்ற மூன்று பேர் போலீசை கண்டதும் தப்பியோடினர். அவர்களை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்தனர்.அதில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த சங்கர், 27; விழுப்புரம் சாலாமேடு இ.பி., குடியிருப்பை சேர்ந்த பழனி, 47; மற்றும் குமரேசன், 30; என்பது தெரியவந்தது.மேலும், குமரேசன் தாய் இறப்பிற்கு வந்த சங்கர், பழனி குமரேசன் கூட்டு சேர்த்துக்கொண்டு, காப்பர் கம்பி திருட முயன்றதும், சங்கர் மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் ஆடு திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிரபு, வழக்கு பதிந்து சங்கர், குமரேசன், பழனியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE