கள்ளக்குறிச்சி; பொங்கல் பண்டிகையையொட்டி கள்ளகுறிச்சி பருத்தி ஏல சந்தை நாளை நடைபெறாது என மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் வாரந்தோறும் புதன் கிழமை பருத்தி ஏல சந்தை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.கோயம்புத்துார், அன்னுார், திருப்பூர் போன்ற பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள், ஏலத்தில் பங்கேற்று பஞ்சின் தரத்திகேற்ப விலை நியமனம் செய்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையினையொட்டி நாளை (13ம் தேதி) புதன் கிழமை பருத்தி ஏல சந்தை விடுமுறை எனவும், தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி முதல் சந்தை நடைபெறும் என மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE