கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்தனர்.கல்வராயன்மலை பகுதியில் வனச்சரக அலுவலர்கள் ராஜா, செந்துார் சுந்தரேசன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கல்வராயன் மலையில் உள்ள நாரணம்பட்டி, சோத்துார், கொடமாத்தி, சின்னதிருப்பதி உள்ளிட்ட கிராமங்கங்களில் நேற்று சாராய ரெய்டு சென்றனர்.அப்போது அங்குள்ள வனபகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து வைத்திருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE