விழுப்புரம்; புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு முன், வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது, இந்த பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரித்த துணிகள், ரப்பர் பொருட்கள், டயர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் எரிக்கப்படுகிறது.இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு, வெளியேறும் நச்ச வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் நோய்களால் மக்கள் பாதிக்கின்றனர். வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE