திருக்கோலுார்; காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளதால் டாட்டா ஏஸ் வாகனத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.விளைச்சல் அதிகரித்தால் ஒருபக்கம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி. என்றாலும், அதன் விலை குறைந்து விடும். இதனால் குறைந்த அளவு லாபத்தையே விவசாயிகள் பெறமுடியும். இதற்கு உதாரணம் தான் இந்த ஆண்டு காலிபிளவர் விளைச்சல் அதிகரித்ததால் அதன் விலையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.பெங்களூரு காய்கறி மார்க்கெட்டில் மிகக்குறைந்த விலைக்கு காலிபிளவரை ஏலத்தில் எடுக்கும் மொத்த வியாபாரிகள், அதனை லாரிகள் மூலம் திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டுவந்து, டாட்டா ஏஸ் வாகனத்தில் வைத்து ஒரு பூ ரூ.25க்கு விற்பனை செய்கின்றனர்.இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் போதிய லாபத்தைக் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை ஆனால் சமையல் பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE