பேரையூர் : தொடர் மழையால் மானாவாரி பருத்தி மகசூல் பாதித்த நிலையில் அழுகிய காய்களில் பஞ்சு சேதமடைந்துள்ளதால் பேரையூர் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழையால் பருத்தி வயலில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடிகளில் இலைகள் உதிர்ந்து, வேர்பகுதி அழுகி பாதிக்கப்பட்டது. இதனால் காய்களில் இருந்து பஞ்சு வெளிப்படும் நிலையில் செடிகள் காய்ந்து மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காய்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கிறது. வேறு வழியின்றி வீணாகிய காய்களை சேகரித்து அதில் இருந்து பஞ்சை பிரித்தெடுத்து வருகின்றனர்.பல காய்களில் வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டிய பஞ்சு நிறம்மாறி கருமையாகிவிட்டது. இதில் வீணாகியது போக மீதமுள்ள காய்களில் பஞ்சை பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி வருகின்றனர். பஞ்சு தரமற்றதாக இருப்பதால் எதிர்பார்த்த விலை கிடைக்குமா என்று கவலை அடைந்துள்ளனர்.பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால், அங்கு செடிகள் முற்றிலும் அழுகி தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE