கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பின் முன்கள பணியாளர், முதியோருக்கு கிடைக்கும்.
தமிழகத்தில் இத்தடுப்பூசி போடும் பணி ஜன.,16ல் துவங்குகிறது. மதுரையில் முதல்வர் பழனிசாமி துவக்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது.அரசு சுகாதாரப்பணியாளர்கள் 8 ஆயிரம் பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். தனியார் தரப்பில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி நேற்று மாலை நிறைவு பெற்றது.
பதிவு வரிசைப்படி தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மையங்கள், மருந்தை சேமிக்கும் மையங்கள், குளிர்சாதனை கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தடுப்பூசி செலுத்தும் சிரிஞ்சி, ஊசிகளை மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அனுப்பியுள்ளது. 33 லட்சம் சிரிஞ்சிகள் பிரித்து வழங்கப்பட்டன.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் குமார் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி பணிக்கு 1,20,400 சிரிஞ்சிகளை மாவட்டத்திற்கு அரசு வழங்கியுள்ளது. அனைத்தும் தலா 0.5 மி.லி., மருந்து செலுத்தும் திறன் கொண்டவை. இவற்றுக்கான ஊசியும் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE