அவனியாபுரம் : அவனியாபுரத்தில் ஜன., 14 நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் பெற உரிமையாளர்கள் நேற்று முன் தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர்.
மாடுபிடி வீரர்கள் 431 பேருக்கு உடல் தகுதி பரிசோதனை செய்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர். நேற்று காலை 9:00 மணி முதல் காளைகள் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக மதுரை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 2,500க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு வரத்துவங்கினர்.
கொட்டும் மழையிலும் காத்திருந்தனர். நேற்று காலை கூட்டம் அதிகளவில் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களை வரிசைப்படுத்தினர். 788 காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE