பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் கழிவுநீர் வாய்க்கால்கள் கடந்த 5 நாட்களுக்கு முன் துார் வாரப்பட்டது. அதன் பின் வாய்க்கால் பகுதி மூடப்படவில்லை.இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டிற்கு அதிகளவில் பொதுமக்கள் வரும் நிலையில், கழிவுநீர் வாய்க்காலை, மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE