கடலுார்; தமிழ்நாடு மின்வாரிய இந்திய தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் கடலுார் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் சுகுமார், பணி தலைவர் குமார், மாநிலச் செயலாளர் கருணாகரன், மாநில துணைத் தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது. அனைத்துத் துறைகளில் உள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்ப்பது. வாரிய உறுப்பினர்களை அதிகளவில் நியமிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE