பெண்ணாடம்; கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் சார்பில், ஆலிச்சிக்குடியில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் சின்னப்பிள்ளை, கிராம மக்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., மோகன் பேசுகையில், 'கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில், பொது மக்கள் - போலீசாரிடையே நட்புறவை ஏற்படுத்தவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், கிராம காவலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்கள், தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடந்தால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர். இதனால், கிராமங்களில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டி குற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்' என்றார்.இதேபோன்று, பவழங்குடியில் கிராம கண்காணிப்பு காவலர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE