சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு பகுதிகளில் அறுடைக்குத் தயாரான சம்பா நெற்பயிர்கள் கனமழையில் சேதமடைந்துள்ளன.சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் வரை சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.புரட்டாசி பட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து வரும் மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியிலிருந்து பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன.இதனால், பயிர்கள் அழுகி சேதமடையும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE