காட்டுமன்னார்கோவில்; டெல்டாவில் பெய்யும் தொடர் மழையால் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு மூலம் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.கடந்த மாதம் 'புரெவி' புயல் காரணமாக பெய்த மழையால் டெல்டாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சம்பா பயிர்கள் சேதம் அடைந்தன.மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்களுக்கு விவசாயிகள் மீண்டும் உரம், பூச்சு மருந்து அடித்து செலவு செய்து குறைந்த மகசூல் அளவில் நெல் அறுவடை செய்ய தயார் செய்தனர்.இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தும், வயலில் தண்ணீர் வடியாததால் அறுவடை மெஷின்களை வயலில் இறங்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் நிலையால் குறைந்த அளவில் கிடைக்கும் நெல் மகசூல் கூட கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE