கடலுார்; தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் அழகானந்தம் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ராமநாதன், அங்கன்வாடி மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.பணியில் இருந்து ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய சிறப்பு சேம நல நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE