உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ளது.விரைவில் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
தேனி மாவட்டத்தில் உத்தமபாளயைம் பெரிய தாலுகாவாகும். இருமாநில எல்லையை இணைக்கும் தாலுகா ஆகும் லோயர்கேம்ப் - சீலையம்பட்டி, தேவாரம் - ைஹவேவிஸ் வரை நீண்டுள்ளது. தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு, பொதுப்பணித்துறை அலுவலக பயணியர் விடுதி போன்ற கட்டடங்கள் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம், தேவைகள் அதிகரிப்பதால் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம் தேவை ஏற்பட்டது.
இதற்கு இங்குள்ள மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் திறப்பு விழா நடத்தி புதிய கட்டடத்திற்கு தாலுகா அலுவலகம் மாற்றப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE