சேத்தியாத்தோப்பு; வீரமுடையாநத்தத்தில் வேர்க்கடலை பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வீரமுடையாநத்தம் ஆற்றுப் படுகையில் விவசாயிகள் வேர்க்கடலை விதைப்பு செய்துள்ளனர். ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணி முதல் பெய்த கனமழையினால் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தன. ஏற்கனவே, பெய்த மழையில் விளை நிலங்கள் நன்கு ஊறியிருந்த நிலையில் நேற்று பெய்த மழையில் பயிர்கள் முழுதும் நீரில் மூழ்கின.இதனால், செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE