தேனி : மண் வளம் காக்கவும், மழை வளம்பெருக்கவும்,மண்ணுக்கு தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பை துாக்குவோம்' செயல்திட்டம் மூலம் ரீடோ தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இத் தொண்டு நிறுவனத்தை ஆசிரியர் பெருஞ்சித்திரன் நிர்வகிக்கிறார். 80 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தேனி ஒன்றியத்தில் சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அடர் குறுங்காடுகள், அணிநிழற்காடுகளை உருவாக்குவது, குளம் காப்போம், மனிதகுலம் காப்போம், துணிப்பைகளை துாக்குவோம், அரசு பள்ளிகளின் பசுமை மேம்பாடு, கோயில் காடுகள் மேம்பாடுகள் போன்ற செயல்திட்டங்களை வகுத்து, மக்களுக்கு சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த அமைப்பினர் உயர்ந்த, நடுத்தர மரங்கள், புதர்கள், செடிகள், மரத்தைப் பற்றி படரும் செடிகள், தரையை பற்றி படரும் கொடிகள், தரைக்குக்கு கீழ் வழங்கும் கிழங்கு வகைகளை வகைப்படுத்தி சுழலுக்கும், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அணிநிழற்காடுகளை உருவாக்குகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE