நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செல்வராஜ், சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் திலகர் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், சாந்திராஜ் கடலுார் நகர தலைவர் வேலுசாமி, வட்டாரத் தலைவர்கள் சீத்தாராமன், ராமகிருஷ்ணன், ராமலிங்கம், பஷீர், ஜெயவேல், சங்கர், செங்கேணி, ரமேஷ், நாகமுத்து, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது. கடலுார் - மடப்பட்டு நான்கு வழிச் சாலைப் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE