சிதம்பரம்; சிதம்பரத்தில் ரத்ததான முகாம் நடந்தது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி மற்றும் பூதகேணி இளைஞர் சங்கம் சார்பில் முஸ்தபா பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, தாளாளர் அன்வர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல் முன்னிலை வகித்தார்.பள்ளிப்படை, பூதகேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். இளைஞர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் டாக்டர் வடிவேலு, பள்ளிப்படை ஊராட்சித் தலைவர் சண்முகம் சான்றிதழ் வழங்கினர்.ஏற்பாடுகளை ஹஜ்ஜி முகமது, ஜவகர் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE