திண்டுக்கல் : 'நிலக்கோட்டை வாரச்சந்தையில் விதிகளை மீறி சுங்கக்கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி' வியாபாரிகள், திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்துள்ளனர்.அதில் கூறியிருப்பது: நிலக்கோட்டை வாரச்சந்தையில் 400 பேர் வியாபாரம் செய்கிறோம். இங்கு அரசு உத்தரவை மீறி, 3 மடங்கு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர். வசூலிக்கும் தொகைக்கு ரசீதும் வழங்குவதில்லை. அதை மீறி கேட்டால் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வியாபாரம் செய்து வருகிறோம். விதியை மீறி சுங்கக் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE