ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சடையன்குளம் கண்மாய் 7 ஆண்டுகளுக்கு பின் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே பெரிய குளம் தங்கச்சியம்மாபட்டியில் அமைந்துள்ள சடையன்குளம். நீர்ப்பிடிப்பு பகுதி 280 ஏக்கர், கொள்ளளவு 52 மில்லியன் கன அடி. காட்டாற்று வெள்ளம், பரப்பலாறு அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் இதன் நீராதாரம். விழுதுகள், வெற்றித்துளிகள் அமைப்பினர் குளத்தின் நீர்வரத்துக் கால்வாயில் இருந்த செடிகள், முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் தொடர் மழையில் நீர் வரத்து ஏற்பட்டது. பரப்பலாறு அணை நிரம்பும் நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சடையன்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏழு ஆண்டுகளுக்கு பின் மறுகால் சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நடராஜ் மலர் துாவி தண்ணீரை வரவேற்றனர். உதவி பொறியாளர்கள் உதயகுமார், தமிழ்செல்வன், நாகராஜன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE