செம்பட்டி : தருமத்துப்பட்டி, வண்ணம்பட்டி குக்கிராமங்களில் மின்வினியோகம் பாதிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
செம்பட்டி துணைமின் நிலைய பகுதியில் முன்னறிவிப்பின்றி மின்தடை அமல்படுத்தப்படுகிறது. தருமத்துப்பட்டி, கரிசல்பட்டி, வண்ணம்பட்டி, கசவனம்பட்டி, கோனுார், குட்டத்துப்பட்டி, வட்டப்பாறை ஆகிய குக்கிராமங்களில் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.இரவு நேரங்களிலும் முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னை தொடர்கிறது. விவசாயத்திற்கான மின்வினியோக நேரமும், சில பகுதிகளில் கணிசமாக குறைத்துள்ளனர்.
போதியளவு தண்ணீர் கிடைத்தபோதும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீரற்ற மின்வினியோகத்தால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE