செம்பட்டி : ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவரை மிரட்டியவரை, தாக்கியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சித் தலைவர் பவுன்தாய். அவர், ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, சுக்லாபுரம் மணியரசன் 29, தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். பவுன்தாய் புகாரின் பேரில், அம்மையநாயக்கனுார் போலீசார், ஜாதியைக்கூறி திட்டியதாக மணியரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.பவுன்தாய் ஆதரவாளர்கள் சிலர், மணியரசனை கடத்தி தாக்கியதாக செம்பட்டி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில், ஜம்புதுரைக்கோட்டை ஐயப்பன், சிரஞ்சீவி, மகேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE