கடலுார்; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்துகிருஷ்ணன் பிள்ளை தெருவில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்துகிருஷ்ணன் பிள்ளை தெரு வளைவில் (வண்டிப்பாளையம் ரோடு) நகராட்சி ஊழியர்கள் மற்ற பகுதிகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இதனால், மலை போல் குவிந்த குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், நாய், பன்றிகள் குப்பைகளைக் கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, குப்பைகளை அகற்றி இனி இந்த இடத்தில் குப்பையைக் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE