பழநி : பழநி முருகன் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 48 நாட்களுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.இதில் ரூ.2 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரத்து 740 பணம், தங்கம் -914 கிராம், வெள்ளி -27,891 கிராம், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்- 77 கிடைத்துள்ளது.
இணை ஆணையர் கிராந்தி குமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை மண்டல துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் பங்கேற்றனர். இன்றும் (ஜன.12) உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE