சிவகங்கை : இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்துவதாக கூறி சிவகங்கை மாவட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பெற்று தவணை காலம் முடிந்தும் வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரையை மண்டல அலுவலகமாக கொண்டு டிஸ்க்' என்ற பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்துவதாக கூறி, சிவகங்கை மாவட்டத்தில் தினக்கூலி பெண்களிடம் மாதாந்திர தவணை தொகை பெற்று வந்துள்ளனர்.2016 ல் இருந்து இன்சூரன்சுக்கான பிரீமிய தொகை செலுத்திய, பல பெண்களுக்கு 2018 ல் தவணை காலம் முடிந்து விட்டது. தவணை காலம் முடிந்து 2 ஆண்டுக்கு மேல் ஆகியும், முதிர்வு தொகையை வட்டியுடன் வழங்காமல், மோசடி செய்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதனிடம் புகார் அளித்தனர். அவர் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE