திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில்விவசாய பணிகள் துவங்கியது. சில நாட்களாக பெய்து வரும் மழையாலும், கண்மாய்கள் நிரம்பி வெளியேறும் உபரி நீராலும் பெரும்பாலான வயல்கள் நீரில் மூழ்கியது.
அறுவடை நேரத்தில் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.நேற்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் குணபாலன், திருவாடானை உதவி இயக்குநர் கருப்பையா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தண்ணீர் தேங்கிய வயல்களை பார்வையிட்டனர்.வேளாண்மை அலுவலர்கள் கூறியதாவது:வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE