திருத்தணி - பொங்கல் விழா, நாளை துவங்கி, 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இம்மாதம், 13ம் தேதி, போகி பண்டிகையும், 14ம் தேதி பொங்கல் விழா, 15ம் தேதி மாட்டு பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் வகையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், நேற்று மாலை முதல், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இது குறித்து, திருத்தணி பணிமனை கிளை மேலாளர் முருகன் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்காக, காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய இடங்களுக்கு, பயணியருக்கு ஏற்ப மொத்தம், 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த சிறப்பு பஸ்கள், வரும், 18ம் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE