சென்னை - 'குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதால், பள்ளிகளை உடனடியாக திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அரசு பள்ளி, கல்லுாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி, இந்திய மாணவர்கள் சங்கத்தினர், நேற்று சென்னை கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:பள்ளி, கல்லுாரிகள், 11 மாதங்களாக திறக்கப்படாததால், ஏழை, எளிய மாணவர்கள், வேலைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.இதனால், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தியேட்டர்கள், சமூகத்தை சீரழிக்கும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.ஆனால், கல்வி நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படாமல் இருப்பது, உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, சுழற்சி முறையில், அரசு பள்ளி, கல்லுாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE