முகலிவாக்கம் - முகலிவாக்கத்தில், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரால், மக்கள் கடும் அவதிஅடைந்தனர்.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், 156வது வார்டில், சந்தோஷ் நகர் அமைந்துள்ளது. அதன், ஐந்து தெருக்களில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.ஆறாவது தெருவான, ரதி தெருவில், மழை நீர் வடிகால் இல்லை. மேலும், அது முட்டுச்சந்தாக உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழைக்கு, இத்தெருவில் மழை நீர் புகுந்தது.இது குறித்து சென்னை மாநகராட்சியினர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., ஆகியோரிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அத்தெருவில் வசிக்கும் பல குடும்பங்கள், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரி கள், போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE