ஆதம்பாக்கம்; பழண்டியம்மன் கோவில் உண்டியல் உடைத்து, 50 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை அருகில், பழண்டியம்மன் அம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து.இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காணிக்கை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இருவர், கோவிலில் புகுந்து திருடி சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE