புதுடில்லி : தேசிய எரிசக்தி சேமிப்பில் ரயில்வே துறை 13 விருதுகளை வென்றுள்ளது.
தேசிய எரிசக்தி சேமிப்பில் கடந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மூன்று பிரிவுகளில் 13 விருதுகளை ரயில்வே துறை பெற்றுள்ளது.

துாய்மை மற்றும் பசுமை மிகுந்த போக்குவரத்திற்கான முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து மேற்கொள்கிறது. இதனால் போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வே முதல் பரிசையும், கிழக்கு ரயில்வே இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இந்த பிரிவில் வடகிழக்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE