பெங்களூரு; சாகரா தாலுகாவில் நடந்த, கொலை வழக்கில், அங்குள்ள நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், தண்டனை விதிக்கப்பட்டது.கேரளாவின், பாலக்காட்டை சேர்ந்தவர், சிஜூ குரியன். இவர், ஷிவமொகா மாவட்டம், சாகரா தாலுகாவின், கெரோடி கிராமத்தில் தனியாக வசிக்கும், ஜோஸ் பாகென் என்பவரின் தோட்டத்தில் பணியாற்றினார். 2012ல், ஜோஸ் பாகென், கொலை செய்யப்பட்டு, தோட்டத்தின் கழிவுகள் கொட்டும் பள்ளத்தில் கிடந்தார்.விசாரணையில், அவரை கொலை செய்தது, சிஜூ குரியன் என்பது தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், சாகரா நகரின், ஐந்தாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றம் சரியானபடி நிரூபணமாகாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.இது தொடர்பாக, அரசு தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவு படி, போலீசார், பாலக்காடிலிருந்து, குரியனை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.உயர்நீதிமன்ற விசாரணையில், அவரது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும்; 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE