வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேர்தல் குறித்து தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவு செய்து வந்தார். இதனையடுத்து, அவரது கணக்கு நீக்கப்பட்டதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் டுவிட்டர் கணக்கை நீக்கியதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதால் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு டுவிட்டரின் பங்குகள் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE