ஈரோடு: நாளை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிளாஸ்டிக், செயற்கை இழை துணி, ரப்பர், டயர், டியூப் பொருட்களை எரிக்கக் கூடாதென, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் திருநாளுக்கு முன், வீட்டிலுள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், நம் முன்னோர்கள் போகியை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால், தற்போது போகி பண்டிகையில் பிளாஸ்டிக், துணிகள், ரப்பர், டயர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த காகிதத்தை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. எனவே, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட, மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE