சேலம்: சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், மத்திய மாவட்ட, தி.மு.க., செயலருமான வக்கீல் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர், ஒன்றியம், பேரூர் மற்றும் ஊராட்சி கிளைகளில் வரும், 14ல், பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. அரிசிபாளையம், கொண்டலாம்பட்டி, ஓமலூரில், கிழக்கு, தெற்கு, வடக்கு, தாரமங்கலம் கிழக்கு, காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு. சேலம் வடக்கு, செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், மெய்யனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, குமாரசாமிபட்டி, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, கன்னங்குறிச்சி என, 21 இடங்களில், பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் சகிதமாக, நடக்கும் விழாவில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE