மகுடஞ்சாவடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இளைஞரணியின், சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மகுடஞ்சாவடியில் நடந்தது. இளைஞரணி செயலாளர் விஸ்வா தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உபயதுல் ரஹ்மான், சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், சேலத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE