சங்ககிரி: சங்ககிரி அருகே, வைகுந்தம் பாவாயிகுட்டை என்ற இடத்தில், சூதாட்டம் நடப்பதாக சேலம் எஸ்.பி., தீபாகானி கேருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு எஸ்.பி., ஸ்பெஷல் போலீஸ் குழுவினர், சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட, 19 பேரை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய, 10 பைக்குகள், இரண்டு நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களிடமிருந்து, ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 870 ரூபாயை கைப்பற்றி, சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE