சேலம்: சேலம், கிச்சிப்பாளையத்தில் தோஷம் கழிப்பதாக கூறி, நூதன முறையில், மூன்று பெண்களிடம் ஆறு பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. சேலம், கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகர் காலனியை சேர்ந்த அப்பாஸ் மனைவி ஷாகிராபேகம், 60. இவர் மகள் ஷர்மினி பானு, 35, மருமகள் ?ஷரியா, 28, ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு ஜோதிடம் பார்க்கும் போர்வையில் வந்த மர்ம நபர், ஷாகிரா பேகத்திடம், ஆந்திராவில் இருந்து தான் வந்துள்ளதாகவும். உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது; அதை கழித்தால், செல்வம் பெருகும், அதிர்ஷ்டம் அடிக்கும் என, ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதை நம்பிய, ஷாகிராபேகம் அந்த நபரை வீட்டுக்குள் அழைத்து சென்று, தோஷம் கழிக்க சம்மதம் தெரிவித்தார். அவர் கொண்டு வந்த, பானையை வைத்து, அதில் நகைகளை போடச் சொல்லி உள்ளார். அதை நம்பி, மூன்று பேரும் தலா இரண்டு பவுன் என, ஆறு பவுன் நகையை பானையில் போட்டுள்ளனர். அவரது பேச்சில் சந்தேகம் ஏற்படவே, அரை மணி நேரம் கழித்து, மூவரும் பானையை திறந்த போது, அதில் வைத்த நகை மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து, கிச்சிப்பாளையம் போலீசார், மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE