தர்மபுரி: தர்மபுரி, அரசு கலைக்கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடந்தது. கொரோனா தொற்று பரவலால் கடந்த, மார்ச் இறுதியில் இருந்து முடங்கிய கல்லூரிகள், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சமீபத்தில் துவங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் பாதுகாப்புடன் கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர், தமிழர் பாரம்பரியத்துடன், நேற்று கல்லூரி வளாக மைதானத்தில், துறை வாரியாக குழுக்களாக, பொங்கல் விழாவை கொண்டாடினர். மாணவர்கள் நடத்திய பொங்கல் விழாவில், முதல்வர்(பொ) கிள்ளிவளவன் உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, என்.சி.சி., அலுவலர் விஜயதேவன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE