அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 180 விவசாயிகள், 900 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 6,790 முதல், 7,469 ரூபாய் வரையும், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 5,690 முதல், 6,011 ரூபாய் வரையும் விற்பனையானது. 900 பருத்தி மூட்டைகள், 16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE