தர்மபுரி: மக்காச்சோளம் சாகுபடிக்கு, விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், விதைக்காக, மக்காச்சோளத்தை காய வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க வகையில் பெய்தது. இதனால், மாவட்டத்தின், பல பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து கிடைத்தது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், தற்போதும் மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை, மழை பெய்தது. இதனால், விவசாயிகள் தீவன பயிரான மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டி வருவதுடன், மக்காச்சோளத்தை, விதைக்காக காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடைகளில் வாங்கும் மக்காச்சோள விதைகள், சில நேரங்களில் போதிய விளைச்சல் தராமல் உள்ளது. விலையும் அதிகமாக உள்ளது. இதனால், தரமான மக்காச்சோளங்களை குறைந்த விலையில், வாங்கி காயவைத்து, விதைகளை தயார் செய்து பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம், விதைக்கான செலவு குறைவதுடன், நாங்களே தரமான விதைகளை தயார் செய்து விதைப்பதால், விளைச்சலும் அதிகளவில் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE