கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி போலீசார், போச்சம்பள்ளி - சந்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற, போச்சம்பள்ளி அருகே உள்ள திருவயலூரை சேர்ந்த சுப்பிரமணி, 52, என்பவரை கைது செய்தனர். பாரூர் போலீசார் மஞ்சமேடு பஸ் நிறுத்தம் அருகில், லாட்டரி விற்ற மஞ்சமேட்டை சேர்ந்த பழனி, 48, என்பவரை கைது செய்தனர். இதேபோல், ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், லாட்டரி விற்ற, ஊத்தங்கரையை சேர்ந்த சல்மான் கான், 27, காவேரிப்பட்டணம், கொசமேடு பகுதியில், கிருஷ்ணகிரி மேல் தெரு வினோத்குமார், 38, மற்றும் கிருஷ்ணகிரி டவுன் ரவுண்டானா பகுதியில், லாட்டரி விற்ற மேல்கரடிகுறியை சேர்ந்த சுரேஷ், 24, ஆகியோரை அந்தந்த ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE