கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வணிக வளாகத்தில், தென் மேற்கு ரயில்வே கணினி முன்பதிவு மையம் செயல்படுகிறது. இங்கு ஒரு மாதத்துக்கு சராசரியாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரயில் முன்பதிவு செய்கின்றனர். இதனால் ஒரு மாதத்துக்கு, 15 லட்சம் ரூபாய் வரை, ரயில்வேக்கு வருமானம் கிடைக்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த, 2020 மார்ச், 21 முதல், இங்கு, ரயில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதமாக, பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து துவங்கியதால், கடந்த மாதம் தர்மபுரி, ஓசூரில் ரயில் முன்பதிவு துவக்கியது. கிருஷ்ணகிரியில், நேற்றில் இருந்து ரயில் முன்பதிவு துவங்கியது. நேற்று ஒரே நாளில், 2,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE