கிருஷ்ணகிரி: ஆந்திர மாநிலத்துக்கு, எருதுகளை கொண்டுவர வேண்டாம் என, ஆந்திர மாநில போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஆந்திர மாநிலத்துக்கு எருதுகளை கொண்டு சென்று, ஓட விடுவது வழக்கம். ஆனால், ஆந்திராவில் ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டத்துக்கு, முற்றிலும் தடை உள்ளது. அப்பகுதியில், 'வாட்ஸ் ஆப்'பில் வந்த தகவலில், ஆந்திர மாநிலத்தில் எருதாட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், எனவே, தமிழக மக்கள் தங்களது எருதுகளை கொண்டு சென்று, விழாக்களில் பங்கேற்கலாம் என்ற தகவல் வைரலாகியது. இதையறிந்த ஆந்திரா மாநில போலீசார், ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டத்துக்கு தடை நீடிப்பதாகவும், எனவே, 'வாட்ஸ் ஆப்' தகவலை நம்பி, யாரும் ஆந்திர மாநிலத்துக்குள் எருதுகளை கொண்டு வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதையும் மீறி எருதுகளை கொண்டு வந்தால், பறிமுதல் செய்வதுடன், சட்டபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என, குப்பம் புறநகர் இன்ஸ்பெக்டர் யதீந்திரா, எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE