கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி கோட்டையூரை சேர்ந்த மக்கள், பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கோட்டையூர் கிராமத்தில், கடந்த, 70 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். அதனால், கடந்த, 1985ல், 30 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், எங்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்கிய நிலத்தில், குடியிருந்தவர் ஆட்சேபணை தெரிவித்ததால், பட்டா வழங்கவில்லை. பின்னர், 30 நாட்களில் ஆட்சேபனையின்றி நிலத்தை அவர் வழங்கி விட்டார். அதனால், நில அளவையர் அந்த இடத்தை அளந்து, அதிகாரிகளுக்கு விபரம் அளித்தனர். ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால், பல ஆண்டுகளாக, குடியிருக்க வீடின்றி தவித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி கடந்த, 35 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE