மதுரை : மதுரையில் தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க தென் மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
பொது செயலாளர் சீனி ரெங்கநாதன், பொருளாளர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினர். மதுரை மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் வரவேற்றார். மதுரை நிர்வாகிகள் தங்கராஜ், அய்யனார், கோபாலன், தேனி வடிவேல், லியாகத்அலி, விருதுநகர் சுந்தர்ராஜ், துாத்துக்குடி தனசிங், கன்னியாகுமரி வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில அளவில் அனைத்து மூத்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பகுதிநேர ஆசிரியர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க பொது அரசாணை வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளாக பி.டி.ஏ.,வின் கீழ் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சென்னை இயக்குனர் அலுவலகத்தில் மூத்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பில் ஜன.,15 முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி மாவட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE