கோவை : கோவையில், பா.ஜ.,வை இழிவுபடுத்தும் வகையில், அவதுாறு நோட்டீஸ்களை, பொது இடங்களில் வினியோகித்தது குறித்து பா.ஜ.,வினர் நேற்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.
பா.ஜ., கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''கோவையில் மத நல்லிணக்கத்துக்கு, ஊறு விளைவிக்கும் வகையிலும், பா.ஜ.,வை இழிவுபடுத்தும் வகையிலும் போலியான முத்திரையுடன் கூடிய, தபால் அனுப்பப்பட்டுள்ளது. பொது இடங்களில் நோட்டீஸ் வினியோகித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE