நாமக்கல்: தமிழக அரசு, நடப்பு ஆண்டு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில், நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், கபிலர்மலை, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என, 10 இடங்களில், கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்டம் ழுமுவதும், 44 ஆயிரத்து, 955 பேருக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், 6,653 பேருக்கு வழங்கப்படுகிறது. அதற்காக, அங்கு, தடுப்புகள் அமைக்கப்பட்டு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE